திருச்சி மாவட்டம் ஓமாந்தூர் கிராமம் Maruthai Event Manegement உரிமையாளர் திரு N.நமநாதன் அவர்கள் 29.12.2020 செவ்வாய்க்கிழமை அதிகாலை கொழும்பில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கொட்டகலை V.R. நடேசபிள்ளை - செல்லம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும் , நாவலப்பிட்டி காலஞ்சென்ற ஏகாம்பரம்பிள்ளை - தைலம்மை அம்மையார் ஆகியோரின் மருமகனும்
வசந்தகுமாரியின் அன்பு கணவரும் , சுஜீவ் , ஜனனி ஹரித்ரா ஆகியோரின் தந்தையும்
சந்துரு பிரதீபா அவர்களின் மாமனாரும்
காலஞ்சென்ற கொட்டகலை ராஜேந்திரன், திருச்சி விஸ்வநாதன் , கொழும்பு ஓமவள்ளி , கொட்டகலை வசந்தா, ஓமந்தூர் ராணி , காலஞ்சென்ற ஓமந்தூர் திருநாவு ஆகியோரின் சகோதரரும்
காலஞ்சென்ற கொழும்பு வீ.பீ. சதாசிவம்பிள்ளை , காலஞ்சென்ற கொட்டகலை சிவலிங்கம் பிள்ளை , திருச்சி தேவராஜ் பிள்ளை ஆகியோரின் மாப்பிள்ளையும்
கொழும்பு கல்பனாஸ் E சுப்ரமணியம் , சென்னை சாரி பொயின்ட் E சதாசிவம் , கொழும்பு ஜெய்ஶ்ரீ E செல்வராஜ் , கொழும்பு சிட்டி பொயின்ட் E கணேசன் ஆகியோரின் மாப்பிள்ளையும்
திருச்சி பொன்மலைப்பட்டி காலஞ்சென்ற சதாசிவம் பிள்ளை , திருச்சி ரட்ணம் பிள்ளை ஆகியோரின் சகலையும்
திருச்சி புஸ்பவள்ளி , திருச்சி பரமேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்
கண்டி திரு.திருமதி. சதாசிவம் பிள்ளை , கொழும்பு திரு.திருமதி நித்தியானந்தன் ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல்
30.12.2020 அன்று காலை 08.00 மணி முதல் பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு
மதியம் 02.30 மணியளவில் இறுதிக் கிரிகைகள் நடைபெற்று
மாலை 04.00 மணிக்கு பொரளை கனத்தை மின் மாயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.