விண்ணக வாழ்வில் ஆண்டுகள் பதினான்கு
'ஆண்டவரே, உழைப்புக்குப்பின் இளைப்பாறுதல்
நீரே. சாவுக்குப்பின் வாழ்வும் நீரே'
அகிலமதில் அன்புக்கோர் அன்னையாய்
கண்டிப்பும் காருண்யமும் மிக்க ஆசானாய்
பாசமும் பரிவும் கொண்ட சகோதரியாய்
பேரக் குழந்தைகளின் அன்புப் பேத்தியாய்
அனைவர் மீதும் அன்பைப் பொழிந்து
எம்மிடையே வாழ்ந்தீர்கள்
நாங்கள் சோர்வடைந்த வேளைகளில்
சோதனைகளை எதிர்கொள்ள வலுவூட்டி
எமை மீண்டெழ வைத்தீர்கள்
இறைவனின் நியதியில் உமைப் பிரிந்து
ஆண்டுகள் பதினான்கு கழிந்ததுவே
உங்கள் நினைவுகள் நாம் வாழும் வரை
எம்முடன் வாழும்
உங்கள் ஆத்மா இறைசந்நிதியில் இளைப்பாற பிரார்த்திக்கின்றோம்.