யாழ். கரவெட்டி கிழக்கு சோலைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Barkingside ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா குணரட்ணராஜா அவர்கள் 25-10-2021 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தங்கவேலு, இரத்தினம்(லண்டன்) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
மஞ்சுளா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ரஜிந்தன், ரவீதன், ராதவன், தவராம், சிறீராம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிருஷ்னி, சரண்யா, காயத்ரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தவமணிதேவி(தேவி), நவமணி, லஷ்மி, நவரட்ணராஜா , சிவானந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவபாதசுந்தரம், காலஞ்சென்ற செல்வராசா, பரமேஸ்வரன், அமிர்தம்மா(கலா), மகேந்திரரதி, திரு. திருமதி நக்கீரன், திரு. திருமதி கண்ணன், திரு. திருமதி ஜெயபரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திரு. திருமதி முருகநாதன், திரு. திருமதி மகிதரன், திரு. திருமதி அற்புதராஜா ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,
திரு. திருமதி ரகுநாதன், திரு. திருமதி பகீரதன், திரு. திருமதி ரகுராமன், திரு. திருமதி ராம்ராஜ், திரு. திருமதி அகிலன், திரு. திருமதி லவன், திரு. திருமதி ராஜ்குமார், ராம்குமார், திரு. திருமதி கோபின், தருண், சங்கீதா, ஹம்சினி ஆகியோரின் அன்பு மாமாவும்,
திரு. திருமதி றோகன், திரு. திருமதி விஜித், ராம்ஜித், திரு. திருமதி சிவானந்தன், திரு. திருமதி ரதீஷன், சிவராம் ஆகியோரின் பாசமிகு ஆசையப்பாவும்,
சாம்பவி, பிரணவி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
அன்புசெல்வன், சைலஜா, நீரா, சரண், அக்ஷ்சயா, அஷ்மிதா, லக்ஷிகா, லதுஷன், அஜய்தேவ், ஆல்யா, ஆசுஷ்தேவ், அஷ்வின், அனிக்கா ஆகியோரின் ஆசைத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.