இதயம் கனக்கிறது
இயலாமையால் அல்ல உங்கள்
இல்லாமையால்!
ராகங்கள் பதினாறும்
ரசிப்பதை நிறுத்தி விட்டேன் -அவை
ரணமாக ஒலிக்கின்றன!
சத்தமின்றி அழுகிறேன்
சகலமும் எமக்கிருந்தும்
சஞ்சலமாய் இருப்பதனால்!
துயர் மறக்க முடியுதில்லை
துளிகூட உங்கள் முகம்
மறைவதில்லை!
நரை கூடி வரும் வயதிலும்
திரை மறைவில் அப்பாவை
தேடுகிறது மனது.